Tuesday, March 4, 2014

தாக சாந்தி

கனவின் மந்தாரத்தில்
இரை எடுத்த
மலைப்பாம்பாய்
நெளிந்து கொண்டிருந்தேன்
கட்டில் முழுவதும்,

முந்திய நாள் கலவியின்
தடயங்களாய் குறுகுறுத்தன
உள்காயங்களும் வெளி காயங்களும்..

இன்னொரு முறை
இன்னொரு முறை
என்று கேட்டு பெற்ற
எந்த இன்பமும் ஈடு செய்ய வில்லை
என்றோ ஒரு நாள் தற்செயலாய்
சந்தித்து  அரைகுறையாய்
தழுவிக்கொண்டு பிரிந்த
தாகத்தை...