காதலின் கையை
இறுகப்பற்றிக்கொண்டே
சுதந்திரத்தை பற்றி
உரக்கக் குரல் எழுப்புகிறேன்...
உறங்குவதற்கும் விழிப்பதற்கும்
உண்டான தருணங்களை
ஒத்திகை பார்க்க
பயன்படுத்திக்கொள்கிறேன்
முட்டாள் தனமான
அச்சங்களோடு...
நாள்
ஒற்றையடி பாதையிலேயே பயணம்!
இருதலையான பின்னும்
மாட்டு வண்டி தடத்தின் மீதான
கண்கள் மூடிய பயணம்!
ஆப்பிளை உண்ண சொல்லி
எவவளவோ வற்புறுத்தின
காம பாம்புகள்!
அதன் தலையை நசுக்கி எறிந்து
எரிந்து கொண்டது தான் மிச்சம்!
இரைக்காக கொல்லப்படாத
பட்டாம் பூச்சியின் ஆத்மா
காரணம் கேட்டு
சிறகடிக்கிறது
இறந்த பின்னும்!
இன்னுமா உலகத்தில்
இல்லாத விஷயங்கள்
வணங்கப்படுகின்றன
என்று கேட்டு
விழுந்து விழுந்து சிரிக்கிறது
காதல்!!
இறுகப்பற்றிக்கொண்டே
சுதந்திரத்தை பற்றி
உரக்கக் குரல் எழுப்புகிறேன்...
உறங்குவதற்கும் விழிப்பதற்கும்
உண்டான தருணங்களை
ஒத்திகை பார்க்க
பயன்படுத்திக்கொள்கிறேன்
முட்டாள் தனமான
அச்சங்களோடு...
நாள்
ஒற்றையடி பாதையிலேயே பயணம்!
இருதலையான பின்னும்
மாட்டு வண்டி தடத்தின் மீதான
கண்கள் மூடிய பயணம்!
ஆப்பிளை உண்ண சொல்லி
எவவளவோ வற்புறுத்தின
காம பாம்புகள்!
அதன் தலையை நசுக்கி எறிந்து
எரிந்து கொண்டது தான் மிச்சம்!
இரைக்காக கொல்லப்படாத
பட்டாம் பூச்சியின் ஆத்மா
காரணம் கேட்டு
சிறகடிக்கிறது
இறந்த பின்னும்!
இன்னுமா உலகத்தில்
இல்லாத விஷயங்கள்
வணங்கப்படுகின்றன
என்று கேட்டு
விழுந்து விழுந்து சிரிக்கிறது
காதல்!!