Wednesday, November 27, 2013

செடியை விட்டு
பறிக்கும் போது
முட்கள் மட்டுமல்ல..
பூக்களும் குத்தத் தான் செய்கின்றன...

நமக்குத் தான் உறைப்பதில்லை!!

Monday, November 25, 2013


  • என் பார்வைக்கு
    அப்பால் போகும் முன்
    உன்னை மாயத்துக்கொள்வதேன்
    என்றேன்!

    உன் சுவாசத்தை சுமந்து
    உன் எல்லை வரை போவதே
    நிம்மதி என்றது நீர்க்குமிழி!

Sunday, November 24, 2013

அம்மாவாய் .....

இன்பத்தில்  தொடங்கி
தவத்தில் நடந்து
ஒரு அழுகையில் பிறந்தது
இந்த தொட்டில்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
என்று அழுகையை தான் குறிப்பிட்டிருப்பார்களோ ?

தூங்கும் பிள்ளைக்கு
வேடிக்கை காட்ட வரும்
தேவதைகளிடம்   மட்டும்
நாத்திகம் பேச பிடிக்கவில்லை!

அழுவது சுவசித்தலில் ஒரு பகுதியாமே...
இருந்துவிட்டு போகிறது...!

சிரிப்பது யாசித்தலாமே...
புரிந்து கொள்ள இயலவில்லை!!

கைகளை சிக்கென்று பொத்திக்கொள்ளும் பிள்ளை
கண்களை நுணுக்கி
சோம்பல் முறித்து
தாயின் வாசத்தையும்
மார்பின் நுனியையும்
அடையாளம் காணும் அறிவியல்...
உத்திரத்தையே  வெறித்துப் பார்க்கும் கண்கள்..
ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் அனுமதி கேளாத
சுதந்திரம்...
பெற்றோரை பிள்ளைகளாக்கும்
புன்னகை...


ஒன்றன் பின் ஒன்றாய்
தொடரும் சுவாரஸ்யங்களை   தனியே அனுபவித்து பின் 
உன்னை பிரிந்த என் கருவறையின் கண்ணீரை
மார்பு வழி துடைத்திடுவாய் பிள்ளாய்! 

கனவுக்கும் கண்களுக்கும்
சம்பந்தமே இல்லை
என நினைத்திருந்தேன் ....

ஒரு பயங்கர
கனவு கொடுத்த
கண்ணீர்
அந்த நினைப்பை
மாற்றிப்போட்டது