Friday, February 23, 2018

தெருநாய்


.
நன்றியும், பயமும், கோழைத்தனமும்
அந்நியர்களிடம் எகிறும் குணமும்
போன்ற அத்தனை மனித குணமும் நிறைந்த
தெருநாய்கள் வித்யாசமானவை
அவற்றுக்கு விலை கிடையாது
அவைகளுக்கு பெயரும் கிடையாது
கருப்பு, சிவலை, நொண்டி, சொறி
இப்படியாக சில அடையாளங்கள் மட்டுமே
அவைகளுக்கு வீடென்று ஒன்றும் இல்லை,
காடென்று ஒன்றும் இல்லை.
வளர்ப்பவரை தவிர
வேறு யார் அன்பையும் பெறுவதில்லை
வளர்ப்பு நாய்கள் !!!
தெரு நாய்கள் அப்படி இல்லை...
துப்பறியும் நாய்களிடம் இல்லா விசுவாசம்,
அந்நியர்களைத் துரத்தும் தெருநாய்களிடம் உண்டு.
சில நேர கல்லடிகளைத் தவிர
வளர்ப்பு நாய்களைப் போல் காதல், காம சுதந்திரம்
மனிதன் வளர்க்கும் நாய்க்கும் இல்லை,
ஏன்... மனிதனுக்குமே இல்லை
உங்கள் கட்டிலில் படுத்து,
உங்கள் குளிர் அறையில் உறங்கி,
உங்கள் சோறை உண்ணும்,
வீட்டு நாய்களுக்கு
சர்க்கரை நோயோ, இரத்த அழுத்தமோ,
மாரடைப்போ, தொப்பையோ வரும் போது தான் தெரியும்
தெரு நாய்களின் ஆரோக்கியம்!!