.............
Tuesday, December 18, 2012
நிராசையாகவும் நீ!
அப்போது என்
ஆசையாக மட்டுமே
இருந்தாய் நீ!
ஒற்றை சிறகுகளால்
கரம் கோர்த்து
மற்றொரு சிறகால்
சிறகசைத்து
விடியல் நோக்கும்
கனவாய் பயணித்தோம்.
நமக்கான கூட்டுக்கு
குச்சிகள், முட்கள்
வெளிச்சத்துக்கு சில மின்மினி பூச்சிகள்
தண்ணீரில் நனைத்த மண்ணுருண்டைகள்
எல்லாமாய் எடுத்து வந்து
என் உதிர்ந்த
இறகை ஒட்டி விட
உலர்ந்த ரத்தம்
பச்சை பிடிக்க
இறக்கைகளின் வலி ஆற்ற
கூட்டுக்கு திரும்புகையில்
என் நிராசையாகவும் நீ!
அப்போதும் என்
ஆசையாக மட்டுமே
இருந்தாய் நீ!
ஆசையாக மட்டுமே
இருந்தாய் நீ!
ஒற்றை சிறகுகளால்
கரம் கோர்த்து
மற்றொரு சிறகால்
சிறகசைத்து
விடியல் நோக்கும்
கனவாய் பயணித்தோம்.
நமக்கான கூட்டுக்கு
குச்சிகள், முட்கள்
வெளிச்சத்துக்கு சில மின்மினி பூச்சிகள்
தண்ணீரில் நனைத்த மண்ணுருண்டைகள்
எல்லாமாய் எடுத்து வந்து
என் உதிர்ந்த
இறகை ஒட்டி விட
உலர்ந்த ரத்தம்
பச்சை பிடிக்க
இறக்கைகளின் வலி ஆற்ற
கூட்டுக்கு திரும்புகையில்
என் நிராசையாகவும் நீ!
அப்போதும் என்
ஆசையாக மட்டுமே
இருந்தாய் நீ!
Saturday, December 15, 2012
மீசை பால்யம்
என் மீசையின்
நரைமுடிகளை
கத்தரித்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொன்றாக ...
அங்கே ஒட்டு மீசை வைத்து
விளையாடிக்கொண்டிருக்கிறது
என் பிள்ளை ...
என் செயல்
மூட நம்பிக்கை...
பிள்ளையின் செயல்
நம்பிக்கை...
நரைமுடிகளை
கத்தரித்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொன்றாக ...
அங்கே ஒட்டு மீசை வைத்து
விளையாடிக்கொண்டிருக்கிறது
என் பிள்ளை ...
என் செயல்
மூட நம்பிக்கை...
பிள்ளையின் செயல்
நம்பிக்கை...
Thursday, December 13, 2012
விதி(மீறல்) வலியது
அப்பெல்லாம்
காதலிச்சு கல்யாணம் பண்ணா
ஓடிப்போயிட்டங்கனு தான் சொல்வாங்க...
இப்பவும் அப்படி தான்...
எட்டாம் வகுப்பு படிக்கும் போதே
ஆச வந்துடிச்சி...
பெரிய ஆளா ஆனப்புறம்
ஓடிப்போய் கல்யாணம்
பண்ணவேண்டும் என்று
உள்ளூர் நாடக திடலில்
ஆண்கள் "மேல்" புறமாகவும்
பெண்கள் கீழ்புறமாகவும்
உட்கார வைத்திருக்கும் போதும்
ஓடிப்போகும் பழக்கம்
இருக்கத்தான் செய்தது.
அப்பவும் காதலிச்சி
ஓடிப்போய் கல்யாணம்
செய்துகொண்டு தான்
இருந்தார்கள்
கல்வியும் செல்வமும்
ஆதிக்கம் செலுத்திய சமூகத்தில்
ஆணும் பெண்ணும்
பேசுறத கண் காது வைத்து பேச
நேரமின்றி தான் போனது
என் சமூகத்திற்கு...
ஆண் பெண் நட்பு
கொஞ்சம் நடைமுறையானது..
காதல் திருமணங்கள்
பெற்றோர்கள் அரை மனதுடன்
செய்து வைக்க தொடங்கிவிட்டார்கள்...
ஓடிபோறவங்க இப்போ
இருக்க மாட்டாங்க
என்ற நம்பிக்கையில் தான்
நான் கடுமையாய்
ஏமாந்தது தெரிந்தது...
ஆனால்..
ஆனால்...
ஆனால்.......
கள்ளக்காதல் மட்டுமே
செய்து கொண்டிருந்த திருட்டு பூனைகள்
கள்ளக்கல்யாணம் செய்வதற்காய்
ஓடிப்போகின்றன இப்போது..
உலகத்தில் மாறுவது வேண்டுமானால்
விதிகளாய் இருக்கலாம்
மாறாதது
விதிமீறல் மட்டுமே...
காதலிச்சு கல்யாணம் பண்ணா
ஓடிப்போயிட்டங்கனு தான் சொல்வாங்க...
இப்பவும் அப்படி தான்...
எட்டாம் வகுப்பு படிக்கும் போதே
ஆச வந்துடிச்சி...
பெரிய ஆளா ஆனப்புறம்
ஓடிப்போய் கல்யாணம்
பண்ணவேண்டும் என்று
உள்ளூர் நாடக திடலில்
ஆண்கள் "மேல்" புறமாகவும்
பெண்கள் கீழ்புறமாகவும்
உட்கார வைத்திருக்கும் போதும்
ஓடிப்போகும் பழக்கம்
இருக்கத்தான் செய்தது.
அப்பவும் காதலிச்சி
ஓடிப்போய் கல்யாணம்
செய்துகொண்டு தான்
இருந்தார்கள்
கல்வியும் செல்வமும்
ஆதிக்கம் செலுத்திய சமூகத்தில்
ஆணும் பெண்ணும்
பேசுறத கண் காது வைத்து பேச
நேரமின்றி தான் போனது
என் சமூகத்திற்கு...
ஆண் பெண் நட்பு
கொஞ்சம் நடைமுறையானது..
காதல் திருமணங்கள்
பெற்றோர்கள் அரை மனதுடன்
செய்து வைக்க தொடங்கிவிட்டார்கள்...
ஓடிபோறவங்க இப்போ
இருக்க மாட்டாங்க
என்ற நம்பிக்கையில் தான்
நான் கடுமையாய்
ஏமாந்தது தெரிந்தது...
ஆனால்..
ஆனால்...
ஆனால்.......
கள்ளக்காதல் மட்டுமே
செய்து கொண்டிருந்த திருட்டு பூனைகள்
கள்ளக்கல்யாணம் செய்வதற்காய்
ஓடிப்போகின்றன இப்போது..
உலகத்தில் மாறுவது வேண்டுமானால்
விதிகளாய் இருக்கலாம்
மாறாதது
விதிமீறல் மட்டுமே...
Sunday, December 9, 2012
மரண போதை
பிள்ளையாய் இருந்த பொழுதுகள்
தெய்வமாய் வாழ்ந்த பொழுதுகளாம்.
அதனால் தான் அவை நினைவில் நிற்பதில்லை
போலும்...
இரத்தம் பார்த்து
அழாமல் அம்மாவின்
திட்டுதலுக்கு அஞ்சிய பால்யம்
வளர வளர
தனிமை படுத்தப்பட்ட
ஆண் பெண் நட்பு...
கூட்டாஞ்சோறு விளையாட்டில்
அம்மா வேடம் போட்ட
தோழியே
மனைவியாக நினைக்கும்
உள் மனத்தின் கனவு...
திருட்டு புகை
திருட்டு மது
காசின்றியே கிடைத்தது
கல்வியை கல்வி நிறுவனங்களும்
கலவியை ஹார்மோன்களும்
கற்பித்து கடமையாற்றின
திருட்டு தனமாய்
பால்யத்திலிருந்து
வாலிபத்திற்கு தாவிய
பருவம்.
திடீரென்று தான்
காதலிக்கிறோம்..
திடீரென்று தான்
காதலிக்கப்படுகிறோம்...
காதல் காமத்தை
நோக்கியும்
காமம் பார்த்த காதல்
விலகுதலை விரும்பியும்
கழிந்தன பொழுதுகள்
எல்லாவற்றிலிருந்தும்
மீட்டுக்கொடுத்த காலம்
பிள்ளைகள் பெற்று
அவர்களுக்காய்
இயங்கும் ஏங்கும் போதையிலிருந்து
மட்டும் மீட்காமலேயே விட்டு விடுகிறது
மரணம் வரை .
தெய்வமாய் வாழ்ந்த பொழுதுகளாம்.
அதனால் தான் அவை நினைவில் நிற்பதில்லை
போலும்...
இரத்தம் பார்த்து
அழாமல் அம்மாவின்
திட்டுதலுக்கு அஞ்சிய பால்யம்
வளர வளர
தனிமை படுத்தப்பட்ட
ஆண் பெண் நட்பு...
கூட்டாஞ்சோறு விளையாட்டில்
அம்மா வேடம் போட்ட
தோழியே
மனைவியாக நினைக்கும்
உள் மனத்தின் கனவு...
திருட்டு புகை
திருட்டு மது
காசின்றியே கிடைத்தது
கல்வியை கல்வி நிறுவனங்களும்
கலவியை ஹார்மோன்களும்
கற்பித்து கடமையாற்றின
திருட்டு தனமாய்
பால்யத்திலிருந்து
வாலிபத்திற்கு தாவிய
பருவம்.
திடீரென்று தான்
காதலிக்கிறோம்..
திடீரென்று தான்
காதலிக்கப்படுகிறோம்...
காதல் காமத்தை
நோக்கியும்
காமம் பார்த்த காதல்
விலகுதலை விரும்பியும்
கழிந்தன பொழுதுகள்
எல்லாவற்றிலிருந்தும்
மீட்டுக்கொடுத்த காலம்
பிள்ளைகள் பெற்று
அவர்களுக்காய்
இயங்கும் ஏங்கும் போதையிலிருந்து
மட்டும் மீட்காமலேயே விட்டு விடுகிறது
மரணம் வரை .
Subscribe to:
Posts (Atom)