Friday, February 23, 2018

தெருநாய்


.
நன்றியும், பயமும், கோழைத்தனமும்
அந்நியர்களிடம் எகிறும் குணமும்
போன்ற அத்தனை மனித குணமும் நிறைந்த
தெருநாய்கள் வித்யாசமானவை
அவற்றுக்கு விலை கிடையாது
அவைகளுக்கு பெயரும் கிடையாது
கருப்பு, சிவலை, நொண்டி, சொறி
இப்படியாக சில அடையாளங்கள் மட்டுமே
அவைகளுக்கு வீடென்று ஒன்றும் இல்லை,
காடென்று ஒன்றும் இல்லை.
வளர்ப்பவரை தவிர
வேறு யார் அன்பையும் பெறுவதில்லை
வளர்ப்பு நாய்கள் !!!
தெரு நாய்கள் அப்படி இல்லை...
துப்பறியும் நாய்களிடம் இல்லா விசுவாசம்,
அந்நியர்களைத் துரத்தும் தெருநாய்களிடம் உண்டு.
சில நேர கல்லடிகளைத் தவிர
வளர்ப்பு நாய்களைப் போல் காதல், காம சுதந்திரம்
மனிதன் வளர்க்கும் நாய்க்கும் இல்லை,
ஏன்... மனிதனுக்குமே இல்லை
உங்கள் கட்டிலில் படுத்து,
உங்கள் குளிர் அறையில் உறங்கி,
உங்கள் சோறை உண்ணும்,
வீட்டு நாய்களுக்கு
சர்க்கரை நோயோ, இரத்த அழுத்தமோ,
மாரடைப்போ, தொப்பையோ வரும் போது தான் தெரியும்
தெரு நாய்களின் ஆரோக்கியம்!!

Thursday, January 25, 2018

பத்மவிபூசன் இளையராஜா



நட்சத்திர அந்தஸ்து  உள்ள நாயகர்
கலை தாகம் உள்ள காதலர்
நேத்து தான் சினிமாவுக்குள் வந்த நடிகன்
இன்று தான் படைக்க  வந்த இயக்குனர்
பரிட்சார்த்த கதை சொல்லும்  இயக்குனர்
கலைநோக்கம் மட்டுமே கொண்ட திரைப்படம்
 கிராமிய பாத்திரம்  மட்டுமே ஏற்கும் கலைஞன்
இவற்றுள் எதையும் ஏற்று  செய்யும் சகலகலாவல்லவன்
இப்படி எல்லா நீருக்கும் பாத்திரமைத்து
இசை தந்த ஞானி..
ராகங்களை எங்களுக்கு தெரியாது..
ஆனால், உன் ராகங்களுக்கு எங்களை தெரியவைத்தாய்..

காற்றை ஆள்பவனுக்கு
நாட்டை ஆள்பவர் செய்யும்
இன்னுமொரு ஆலாபனையாய்
இன்று உன் ஞான சிரத்தில்
இன்னொரு மகுடம் சூட்டியிருக்கிறது அரசு.

என்றென்றும் ராஜா வாழ்க