Thursday, June 18, 2015



சலனமின்றி இருக்கிறது
விரல் கொலுசு...

சத்தமிட்டு சிரிக்கிறது
கைக் கொலுசு..

உன் தனித்துவமாய் இருக்கிறது
நிஜக்கொலுசு

Saturday, June 13, 2015

காக்கா முட்டை

  ஒரு வித்யாசமான கதைக்களத்துடன் ஒரு சினிமா வந்துவிட்டால் இந்த ரசிகர்களெல்லாம் அநியாயத்துக்கு ரசனை தர்மம் போதனைகளும் சேர்ந்தே வந்துவிடுகிறது

அழகி வந்தப்ப...ஆட்டோகிராப் வந்தப்ப மக்களுக்கு வந்த மாதிரி ஒரு அலை இப்ப காக்கா முடடைக்கும் வந்திருக்குது..

ஆட்டோகிராப் வந்த நேரம் ஏன் இதுமாதிரி உங்களால எடுக்கமுடியாதான்னு தியேட்டர்லேயே அங்கலாய்ச்சாங்க...

படம் மசாலா மாதிரி இருந்தா தியேட்டருக்கு போகாதீங்கன்னு நீங்களே உங்க நண்பர்கிட்ட சொல்லுங்கன்னு அந்த படம் சம்பந்தப்பட்டவரே சொன்னார்..

அழகி வந்த நேரம்..இது மாதிரி கதை தந்தா நாங்க ஏன் ரசிக்கமாடடேங்றோம்...நீங்க தான் மசாலாவா கொடுத்து எங்கள கெடுத்து வச்சிருக்கீங்கன்னு குறைபட்டுக்கிட்டாங்க..

அப்டின்னா நம்ம ரசனை தரம் இப்ப உயர்ந்துட்டுதா...

ஆட்டோகிராப் பத்தி நடிகர் ராதாரவியிடமும் இதே கேள்வியை கேட்டார்கள்

ஏன் நீங்க மசாலாவாவே போறீங்க..ஆட்டோகிராப் மாதிரி படம் எல்லாரும் எடுத்தால் என்ன.

அதற்கு அவர் சொன்ன விளக்கம் உற்று கவனிக்க வேண்டியது

ஆட்டோகிராப் மாதிரி ஒரு படம் தான் பண்ண முடியும்...வேண்ணா 20 வருசம் கழிச்சி இன்னொரு புது டைப் கதை வரவேற்கப்படும்...

ஆனா...பாட்டு பைட் மசாலான்னு ஒரு வருசத்துல 30 படம பண்ணாலும் அது தான் ஓடும்..

இது சரியா தப்பாங்கறது தனி விசயம்

இதான் இங்க உள்ள நிலைமை...

ஆகவே...ஒரு காக்கா முட்டை நம் ரசனைக்கு சான்றாக எடுத்துக்கொண்டு நம் ரசனை மாறி விட்டதாக சிலாகிப்பது ஒரு வித தோற்ற மயக்கமே