Thursday, January 25, 2018

பத்மவிபூசன் இளையராஜா



நட்சத்திர அந்தஸ்து  உள்ள நாயகர்
கலை தாகம் உள்ள காதலர்
நேத்து தான் சினிமாவுக்குள் வந்த நடிகன்
இன்று தான் படைக்க  வந்த இயக்குனர்
பரிட்சார்த்த கதை சொல்லும்  இயக்குனர்
கலைநோக்கம் மட்டுமே கொண்ட திரைப்படம்
 கிராமிய பாத்திரம்  மட்டுமே ஏற்கும் கலைஞன்
இவற்றுள் எதையும் ஏற்று  செய்யும் சகலகலாவல்லவன்
இப்படி எல்லா நீருக்கும் பாத்திரமைத்து
இசை தந்த ஞானி..
ராகங்களை எங்களுக்கு தெரியாது..
ஆனால், உன் ராகங்களுக்கு எங்களை தெரியவைத்தாய்..

காற்றை ஆள்பவனுக்கு
நாட்டை ஆள்பவர் செய்யும்
இன்னுமொரு ஆலாபனையாய்
இன்று உன் ஞான சிரத்தில்
இன்னொரு மகுடம் சூட்டியிருக்கிறது அரசு.

என்றென்றும் ராஜா வாழ்க