Tuesday, October 20, 2015

தண்ணீர்
இல்லை என்றால்
கண்ணீரும் இருந்திருக்காது
வியர்வையும் இருந்திருக்காது

தாமரை ஆடும் குளமும்
கெண்டை ஓடும் ஆறும்
திமிங்கல சமுத்திரமும்
இருந்திருக்காது

மழையும் கிடையாது
தூவானக் கவிதைகளும்
கிடையாது

பச்சை கிடையாது
பருவப் பயிர்கள் கிடையாது
களையும் கிடையாது

மரங்கள் கிடையாது
அது உங்களிடம் உயிர்ப்பிச்சையும்
கேட்டிருக்காது

இரத்தமும் கிடையாது
இரத்த வெறியும் கிடையாது

குரல்வளை நனைக்கும்
தாகமும் இருக்காது
இரட்டைக்குவளை
வேதனையும் இருக்காது



வாய்க்கால் நீரிலே
வரும் இளநீரும் இருக்காது
வாயக்கரிசி போடும்
கள்ளியும் அரளியும் இருக்காது

Friday, October 16, 2015

யானை

யானை ஒன்று வீதியில் வந்தது...

என்னை
எட்டி மிதித்துக் கொன்றுவிடும்
என்று தான்
நினைத்திருந்தேன்

அருகில் வந்ததும்
வெலவெலத்து தான் போனேன்

என்னிடம் காசு வாங்கிக்கொண்டு
ஆசீர்வாதமும் செய்து
கடந்து போனது.

யானை  கடந்துபோனதும்
நான் கொடுத்த
இரண்டு ரூபாய் நாணயம்
என் உயிரைக் காப்பாற்றியதாய்
பிதற்றிக்கொண்டிருக்கிறேன்