Monday, January 6, 2014

ரக்க்ஷா பந்தன் தினத்தில்
காதலை சொன்ன
ஒரே பெண் நீ தான்...

கல்லூரியில்
உடன் படிக்கும் அத்தனை
பெண்களையும் கட்டாயப்படுத்தி
என் கையில் ராக்கி கட்ட செய்துவிட்டு
நீ விட்ட பெருமூச்சை
இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்...

முதல் காதல்.

நமது முதல் குழந்தையாக இருக்கிறது
முதல் காதல்,

நம் இரண்டாம் பெற்றோராகவும்   இருக்கிறது
நம் முதல் காதல்!

ஒரே பிரசவத்தில்
இரட்டை ப்பிள்ளை
பெற்ற சந்தோசத்தில் இருக்கிறது
நம் முதல் காதல்.

வாழ்வின் இறுதிநாளில்
எழுதும் கவிதைக்கும்
கருப்பொருளாய் தோன்றி மறைகிறது
நம்


முதல் காதல்.

விழித்துக் கொல்!

தூக்கத்திற்கும் விழிப்புக்கும்
இடையில் இருப்பது
உன் கனவென்றால்...
மயக்கத்தையே பரிசளிப்பது
உன் நனவு...

வாய் நிறைய புன்னகை
வேண்டாம்...
மனம் நிறைய மகிழ்ச்சியை வாரி இறைக்கிறது
உன் அருகாமை...

முத்தங்கள் மட்டும் இல்லை என்றால்
பாலை வன யுத்தங்கள் மட்டுமே
காதலி வரலாறாய் இருக்கும்...

காதலை தைரியமாய்
சொல்லி விட்டேன்...
காமத்தை எந்த மொழியில் சொல்வது...

தவற விட்ட கணங்கள் என்று
என்னை நானும் உன்னை நீயும்
பழித்துக்கொண்டிருக்கிறேன்.

அதற்கு பழிக்கு பழி வாங்கவே
நம்மை பற்றிய பிரமிப்புகள்
அகலும் முன்பாகவே
நம் திருமணத்திற்கு  பிறகு
நம்மிடம் இருந்து
துண்டித்துக்கொள்கிறது
காதல்

ஆதித் திமிர்

காதலிப்பவர்களை பார்த்து
....தித் திமிர் என்று
திட்டுகிறார்கள் பெரியவர்கள்...

அவர்களுக்கு ஒன்றை
சொல்லிக்கொள்கிறேன்
இது ஆதித் திமிர்!

Thursday, January 2, 2014

கண்ணீர் தூக்கம்




பெரிய  சிவப்பு  பாம்பு  ஒன்று
என்னுடன் மணிக்கணக்கில் பேசியது....

வீகாலேண்ட்     ராட்டினக்காரன்
அப்படியே   ஷிப்ட்  ஆகி
என்  வீட்டு   பக்கத்தில்
வியாபாரம்  செய்தான் ....

அதில்  ஆடுவோர்  அனைவருக்கும்
புத்தகம்  ஒன்று இலவசமாக  கொடுத்தான் ....

என்னை ஹீரோவா வச்சி
ஒருத்தர் படமெடுக்கிறார்...
ரஜினியும்  கமலும்
ஷூட்டிங் பார்க்க வந்திருந்தனர்....

ஒருதலை  காதல் எல்லாம்
இருதலை காதலாய்  மாறி
விருப்பம் தெரிவித்தன



ஓடும்  ரயிலில்
விழுந்து   ஆறு   முறை
இறந்து  கிடந்தேன் ....
யாரும்  அழவில்லை  ....
நானும்  சாகவில்லை!!

இறந்து போன என் அப்பாவும்...
பிறந்த உடன் இறந்து போன
என்  பிள்ளையும்
ஒரே நேரத்தில் வந்து என்னை
கட்டிக்கொண்டனர்....

அப்பா   என்று   அலறினேன்
கண்ணீர் வந்தது...
இது மட்டும் நிஜம்
இந்த கனவில்!!