Monday, May 19, 2014

2004ல் நான் திருநெல்வேலி வானொலியில் படைத்த கவிதை

கீழ்வானத்திற்கும்
எழும்பும் சூரியனுக்கும்
நடுவில் விரிந்திருக்கிறது
என் தோட்டம்

இயற்கை அதற்கு நீரூற்ற
எண்ணங்கள் உரமிட
களைகள் எதுவுமின்றி
களைப்பு கொடுக்காமலேயே
துளிர்த்து விடுகின்றன.

கண்ணுக்கெட்டிய  வரை
களைகளின்றி
பயிர்கள் எப்படி?
உங்கள் கேள்வி நியாயமே

புல்லையும் உயிராகவே பார்ப்பவனுக்கு
அது களையென்று தெரியப்போவதில்லை.

இதுதான் முளைக்கவேண்டும்
என்ற தீர்மானமின்றி
உருவாக்கிய தாேட்டம் என்பதால்
எல்லா தாவரத்திலும் சுதந்திர துளிர்ப்பை
பார்க்க முடியும்

 சொர்க்கம் வென்ற தோட்டத்தில்
பூவுக்கான மொட்டுகள்
முகிழ்க்க தாெடங்கிய நேரம்தான்
எனக்கான சோதனையும்
சேர்ந்தே தொடங்கியது

எல்லா பூக்களும்
மதுவாலும். மகரந்தத்தாலும்
நிறைந்திருப்பது தான் இயற்கை
ஆனால் எனது தோட்டத்தில்
அனைத்து  மலர்களும்
கோரிக்ககளாலும் கேள்விகளாலும்
நிறைந்திருக்கின்றன

வண்ணங்களும். வாசங்களும்
அதற்கு இரண்டாம் பட்சம்

சுதந்திர தோட்டத்தில் காலூன்றி
நகரத்து மலர்களின்
வேதனைகளையும் பிரச்னைகளையும்
பட்டியல் போட்டன
அந்த வக்காலத்துப் பூக்கள்

 பூஜைக்கென பறித்துவிட்டு
பக்தன் கையில் படராமல்
சமாதியில் சாந்தியடையாமல்
சாய்ந்தனவே பல மலர்கள்

சஞ்சரிக்கும் காதலர்கள்
ஊடல் அறுக்க
காம்பிலிருந்து கழுத்தறுக்கப்படுகின்றன
இன்னும் பல மலர்கள்

எந்த மனித நாசியும் நுகராவண்ணம்
எந்த வண்டும் பருகாவண்ணம்
தாய்செடிக்கே  உரமாகும்
பல மலர்கள்

வீட்டுத் தோட்டத்தில் பூத்து
வீட்டை வாசம் செய்த பாவத்திறகாய்
புகையிலும். குப்பையிலும்
அழன்று அழுகின்றன
வீட்டுப் பூக்கள்.


மொட்டை மாடியில்
காலைப் பொழுதை
குளுமையாக்கிவிட்டு
உச்சிப் பொழுதில் வெந்துவிடுகின்றன
பல மலரினங்கள்

சைக்கிள் வியாபாரியின்
கூடையில் இருந்துகொண்டு
பலநிற ராேஜாக்கள்
என்று மொட்டுகளை
அடையாளப்படுத்தி
இல்லத்தரசிகளை
ஏமாற்றி வீட்டில் குடியேறும்
எத்தனையோ ரோஜாக்கள்

அத்தனை மலர்களும்
ஒன்றாய் கூடி வைத்த
கோரிக்கைகள் கோக்ஷமானது
கோக்ஷங்கள் இரைச்சலானது

இன்னமு் பிரியாத பெண்ணி்ன் கட்டுகளின்
கேள்வியும் மறுக்கப்பட்டு
நார்கள் வாசம் பெற
தூக்கிலிடப்படும் மலர்களின்
குரல்வளை மெளனமும்
இதய ஓலமும்
என்னை அந்த தோட்டத்தை விட்டே
விரட்டியடிக்கிறது!!!