பெரிய சிவப்பு பாம்பு ஒன்று
என்னுடன் மணிக்கணக்கில் பேசியது....
வீகாலேண்ட் ராட்டினக்காரன்
அப்படியே ஷிப்ட் ஆகி
என் வீட்டு பக்கத்தில்
வியாபாரம் செய்தான் ....
அதில் ஆடுவோர் அனைவருக்கும்
புத்தகம் ஒன்று இலவசமாக கொடுத்தான் ....
என்னை ஹீரோவா வச்சி
ஒருத்தர் படமெடுக்கிறார்...
ரஜினியும் கமலும்
ஷூட்டிங் பார்க்க வந்திருந்தனர்....
ஒருதலை காதல் எல்லாம்
இருதலை காதலாய் மாறி
விருப்பம் தெரிவித்தன
ஓடும் ரயிலில்
விழுந்து ஆறு முறை
இறந்து கிடந்தேன் ....
யாரும் அழவில்லை ....
நானும் சாகவில்லை!!
இறந்து போன என் அப்பாவும்...
பிறந்த உடன் இறந்து போன
என் பிள்ளையும்
ஒரே நேரத்தில் வந்து என்னை
கட்டிக்கொண்டனர்....
அப்பா என்று அலறினேன்
கண்ணீர் வந்தது...
இது மட்டும் நிஜம்
இந்த கனவில்!!
No comments:
Post a Comment