Friday, October 16, 2015

யானை

யானை ஒன்று வீதியில் வந்தது...

என்னை
எட்டி மிதித்துக் கொன்றுவிடும்
என்று தான்
நினைத்திருந்தேன்

அருகில் வந்ததும்
வெலவெலத்து தான் போனேன்

என்னிடம் காசு வாங்கிக்கொண்டு
ஆசீர்வாதமும் செய்து
கடந்து போனது.

யானை  கடந்துபோனதும்
நான் கொடுத்த
இரண்டு ரூபாய் நாணயம்
என் உயிரைக் காப்பாற்றியதாய்
பிதற்றிக்கொண்டிருக்கிறேன்

No comments:

Post a Comment