Wednesday, November 8, 2017

விவாகரத்து

கணவன் மனைவியாய் தொடங்கிய நம் இல்லறம்
கசப்பில் கசப்பாகி
உன்னுடன் வாழவே முடியாது என்று தீர்மானித்த கணம்
தேற்ற ஆளில்லாமல் அழுது தீர்த்து
பெற்றோர்களின் உடன்பிறப்புகளின் நட்புகளி்ன்
வாஞ்சைகளால் வருடப்பட்டு...
தனியே வாழப் பழகிய நாளில்...
எனக்கு உன்னோடு வாழ்ந்த இனிய பொழுதுகள்
அவ்வப்போது வந்து நினைவூட்டத் தவறவில்லை..
உனக்கும் அது நிகழ்ந்திருக்கும்..

பூர்வீக உறவுகள் அலுத்துப்போய் 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கும்
இனிமைகளை கோர்த்து
துணையின் ஆதரவை தேடிய ஒரு நாளில்

அப்பாவின் சினேகிதனின் மைத்துனரின்
மாமனாரின் தம்பி ஒருவர் வழக்கறிஞராய் இருப்பதனால்
அவர்கள் பலமாதம் பிரயாசப்பட்டு வாங்கி வந்த 
விவாகரத்தை வாங்க வேண்டியதாயிற்று

No comments:

Post a Comment