Sunday, September 4, 2016

அன்னை தெரசா..
இனி புனிதர் தெரசா..

இந்த பட்டத்தின் மூலம் இவரது பெயர் இன்னும் பல உள்ளங்களுக்கு சென்றடையலாம்...ஒரு அந்தோணியாரைப் போல், கேரளா அல்போன்சாவை போல், சாய்பாபாவைப் போல் தெய்வத்தன்மை அடையலாம்.

அல்பேனியாவில் பிறந்து ரோமன் கத்தோலிக் துறவியாகி சமூகத்தால் அறுவறுக்கப்பட்ட எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் பீடித்த மனிதர்களை ஆதரவற்ற குழந்தைகளை  முதியவர்களை வாஞ்சையோடு தத்தெடுத்து அருஞ்சேவை செய்தவர். அவரது சேவைக்கு முதலில் விமரசனங்கள் இழிவுகள் இருந்தன. பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார்.

பின்னாளில் அவர் வாழும் காலத்திலேயே சேவையின் சிறப்பு உணர்ந்து போற்றத் தொடங்கிவிட்டது உலகம்.

ஆனால் இப்போது அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பது புனிதர் பட்டம்

வாழும் போதும் வாழ்ந்த பிறகும் கல்லறையில் அற்புதம் நிகழ்த்தும் கிறிஸ்தவ துறவிகளை வாடிகன் போப் அங்கீகரித்து வழங்கும் பட்டம்.

சமீபத்தில் ஒரு பாதிரியார் சொன்னார்..
பெருமளவு சேவை செய்த அன்னை தெரசாவுக்கே இந்த பட்டம் கிடையாது. ஏனென்றால் இது அற்புதத்திற்கான பட்டம். சேவைக்கான பட்டமல்ல.

அன்னை தெரசா விசயத்திலும் இந்த பட்டத்தை வழங்கியவர்கள் அவர் சேவையை குறிப்பிட்டு..இதே போல் சேவை செய்யும் பணிக்கு பலருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்த காரணத்தால் அன்னை தெரசாவுக்கு இந்த புனிதர் பட்டத்தை வழங்குகிறோம் என்றால் கூட  பரவாயில்லை.

இந்த உலகத்தில் ஒரு மனிதனால செய்ய முடியாத ஆனால் மனிதனால் சாத்தியப்படக் கூடிய அன்பைப் பொழிந்த அன்னை தெரசாவின் சேவை...இறந்த பின் கல்லறையில் இருந்து கொண்டு ஒரு பெண்ணின் புற்று நோயைக் குணமாக்கினார் என்ற மேஜிக் பேக்கேஜில் அடைக்கப்பட்டுள்ளது.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நமக்கு அவரது சேவை மறந்திருக்காது..

ஆனால் 100 வருடம் கழித்து வரும் மனிதர்களுக்கு அன்னைதெரசாவின் கடவுள் பிம்பம் தாண்டி மனிதநேயம் இரண்டாவது இடத்தில் தாற் நிற்கும் அல்லது தெரியாமலேயே கூட போய்விட வாய்ப்புள்ளது.

மனித சேவையை விட...அற்புதம் மகிமையை கொண்டாடும் கலாச்சாரம் மேலாேங்குமேயானால்..இன்னமும் கடவுளர்கள் உருவாவதை நிறுத்த முடியாது..மனிதர்கள் உருவாவதை வேண்டுமானால் நிறுத்தலாம்

No comments:

Post a Comment