Saturday, November 3, 2012

நான்... நான்.. நான்...



இசையாலும் ராகத்தாலும்
நிரப்பி வைக்கிறேன்
என் நேச கணங்களை..

உன் மீது அன்பு செலுத்த கூட
நேரமின்றி போகிறது
உன்னைக் காதலிக்கும் அவசரத்தில்

நல்ல பாடல்களின் வரிகளை
கேட்டுக்கொண்டிருக்கும் போதே
என் கவனத்தை திசை திருப்பி விடுகிறாய்...

சில பாடல் வரிகள்
உன்னிடமிருந்தே என்னை
திசை திருப்பி விடுகின்றன..

இவற்றில் யார் பெரியவர்
என்ற போட்டியில்
நீயும் பாடலும்
சண்டையிட்டுக் கொள்ளும்
வேளையில்
நெகிழ்ந்து கொடுத்த நான்
விஸ்வரூபமாய் நிற்கிறேன்
நடுவில்..

நான்... நான்.. நான்...
இவற்றை தவிர வேறு
என்ன இறுக்கிறது
காதலிலும் ரசனையிலும்.

.

No comments:

Post a Comment