Friday, November 9, 2012

யானைக்கனவு

யானைக்கு பயம் தான்
மூடநம்பிக்கை..
பாகனுக்கு தைரியம் தான்
மூடநம்பிக்கை

டைனோசர்கள் இப்போது
வாழ்ந்துகொண்டிருந்தாலும்
அஞ்சத்தேவையில்லை..
பிச்சை எடுக்க
பழகிவிடும்..

காட்டுக்குள் நாடும்
நாட்டுக்குள் காடும்
ஊடுருவும் போட்டியில்
வெற்றியும் தோல்வியும்
நாட்டுக்கேயன்றி காட்டுக்கு இல்லை..

போர்க்களத்தில் காரணமின்றி
இறந்த சரித்திரத்தை விட
பிச்சை எடுத்து சாவது மேலானது 


எனினும்
குழந்தைகள் தன மீது
சவாரி செய்யும் போது
வீதிகளில் பிச்சை எடுக்கும்
வேதனையை மறுக்கின்றன யானைகள்  

1 comment: