Thursday, December 13, 2012

விதி(மீறல்) வலியது

அப்பெல்லாம்
காதலிச்சு கல்யாணம் பண்ணா
ஓடிப்போயிட்டங்கனு தான் சொல்வாங்க...
இப்பவும் அப்படி தான்...

எட்டாம் வகுப்பு படிக்கும் போதே
ஆச வந்துடிச்சி...
பெரிய ஆளா ஆனப்புறம்
ஓடிப்போய் கல்யாணம்
பண்ணவேண்டும்  என்று

உள்ளூர்  நாடக திடலில்
ஆண்கள் "மேல்" புறமாகவும் 
பெண்கள் கீழ்புறமாகவும்
உட்கார வைத்திருக்கும் போதும்
ஓடிப்போகும் பழக்கம்
இருக்கத்தான் செய்தது.

அப்பவும்   காதலிச்சி
ஓடிப்போய் கல்யாணம்
செய்துகொண்டு தான்
இருந்தார்கள்


கல்வியும் செல்வமும்
ஆதிக்கம் செலுத்திய சமூகத்தில்
ஆணும் பெண்ணும்
பேசுறத கண்  காது  வைத்து பேச
நேரமின்றி தான் போனது
என் சமூகத்திற்கு...

ஆண் பெண் நட்பு
கொஞ்சம் நடைமுறையானது..
காதல் திருமணங்கள்
பெற்றோர்கள் அரை மனதுடன்
செய்து வைக்க தொடங்கிவிட்டார்கள்...

ஓடிபோறவங்க  இப்போ
இருக்க மாட்டாங்க
என்ற  நம்பிக்கையில் தான்
நான்  கடுமையாய்
ஏமாந்தது தெரிந்தது...

ஆனால்..
ஆனால்...
ஆனால்.......
கள்ளக்காதல் மட்டுமே
செய்து கொண்டிருந்த  திருட்டு பூனைகள்
கள்ளக்கல்யாணம்  செய்வதற்காய்
ஓடிப்போகின்றன  இப்போது..

உலகத்தில் மாறுவது வேண்டுமானால்
விதிகளாய்  இருக்கலாம் 
மாறாதது
விதிமீறல்  மட்டுமே...



 

No comments:

Post a Comment