Tuesday, December 18, 2012

நிராசையாகவும் நீ!

அப்போது என்
ஆசையாக மட்டுமே
இருந்தாய் நீ!

ஒற்றை சிறகுகளால்
கரம் கோர்த்து
மற்றொரு சிறகால்
சிறகசைத்து
விடியல் நோக்கும்
கனவாய்  பயணித்தோம்.

நமக்கான கூட்டுக்கு
குச்சிகள், முட்கள்
வெளிச்சத்துக்கு சில மின்மினி பூச்சிகள்
தண்ணீரில் நனைத்த மண்ணுருண்டைகள்
எல்லாமாய் எடுத்து வந்து

என் உதிர்ந்த
இறகை ஒட்டி விட
உலர்ந்த ரத்தம்
பச்சை பிடிக்க  
இறக்கைகளின் வலி ஆற்ற
கூட்டுக்கு திரும்புகையில்

என் நிராசையாகவும்  நீ!

அப்போதும்  என்
ஆசையாக மட்டுமே
இருந்தாய் நீ!
 

No comments:

Post a Comment