ஒவ்வொரு இரவிலும்
கனவு வரும்..
ஒரு நாள் கனவில்
இரவு வந்தது...
அந்த கனவில் கூட
நான் சோம்பேறியாக தான் இருந்தேன்
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு!
என்ன ஒரு வில்லத்தனம்,
வருவோர் போவோர் எலாரிடமும்
என்னை ரசனையாளன் என்று
அறிமுகப்படுத்திக்கொண்டேன்!
எரிந்து விழுந்த
பால் வெள்ளியை
எண்ணிய கணக்கில் வைக்கவா?
எண்னாத கணக்கில் வைக்கவா என்று
புதிரும் அறிவித்தேன்...
நல்ல வேளை
நிலா இல்லை...
அது ஏன் என்றும் தெரியவில்லை...
அலாரத்தை ஆசீர்வத்து விட்டு
அதற்கு நல்லிரவும் சொல்லிவிட்டு
மீண்டும் தூங்க எத்தனிக்கும் போது தான்
என்னை சுட்டு
என் கனவில் புள்ளி வைத்தது
சூரிய நட்சத்திரம்!
என் கவிதையின் தலைப்பை
திருத்தி தந்து விட்டு போகிறது
விடியல் வானம்!
இப்போது வாசியுங்கள் திருத்திய தலைப்பை!
நட்சத்திரம்
என்
கண்ணை
சிமிட்டுகிறது!
No comments:
Post a Comment