Sunday, November 24, 2013

அம்மாவாய் .....

இன்பத்தில்  தொடங்கி
தவத்தில் நடந்து
ஒரு அழுகையில் பிறந்தது
இந்த தொட்டில்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
என்று அழுகையை தான் குறிப்பிட்டிருப்பார்களோ ?

தூங்கும் பிள்ளைக்கு
வேடிக்கை காட்ட வரும்
தேவதைகளிடம்   மட்டும்
நாத்திகம் பேச பிடிக்கவில்லை!

அழுவது சுவசித்தலில் ஒரு பகுதியாமே...
இருந்துவிட்டு போகிறது...!

சிரிப்பது யாசித்தலாமே...
புரிந்து கொள்ள இயலவில்லை!!

கைகளை சிக்கென்று பொத்திக்கொள்ளும் பிள்ளை
கண்களை நுணுக்கி
சோம்பல் முறித்து
தாயின் வாசத்தையும்
மார்பின் நுனியையும்
அடையாளம் காணும் அறிவியல்...
உத்திரத்தையே  வெறித்துப் பார்க்கும் கண்கள்..
ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் அனுமதி கேளாத
சுதந்திரம்...
பெற்றோரை பிள்ளைகளாக்கும்
புன்னகை...


ஒன்றன் பின் ஒன்றாய்
தொடரும் சுவாரஸ்யங்களை   தனியே அனுபவித்து பின் 
உன்னை பிரிந்த என் கருவறையின் கண்ணீரை
மார்பு வழி துடைத்திடுவாய் பிள்ளாய்! 

No comments:

Post a Comment