Sunday, June 17, 2012

மோதிரக்குட்டு


நீ
என்றோ மாட்டி விட்டு
பின் கழற்றிப்போன
மோதிரத்துக்காக
இன்னமும் அழுகிறது
என் மோதிர விரல்

அது எந்த உலோகத்தில்
செய்யப்பட்டிருப்பினும்
என் உலகத்தில்
அது விலை உயர்ந்தது!

உன் கரங்கள் பட்ட பிறகு
அதற்கு ஒரு சுவாசமும்
சுவாச பையும்
முளைத்து விட்டது

பிடிதரம் அற்று
மடங்கி நிமிரும்
சுதந்திரம் அதற்கு
பிடிக்கவில்லை

கால் விலங்குக்கு
அடம்பிடிக்கும்
மன நோயாளியை போல்
இன்னமும்
அழுதுகொண்டே இருக்கிறது
அந்த விரல்.

2 comments: