Sunday, June 17, 2012

அழைப்பிதழ்


உனக்கான வீதியில்
பல முறை
வந்திருக்கிறேன்

உன்னை விருபியவர்களின்
கூச்சல்,
உன்னால் நிராகரிக்கப்பட்டவர்களின்
ஓலம்
இவைகளுக்கு மத்தியில்
எப்படி நிம்மதியாய்
வசிக்கிறாய் நீ?

எனக்கான வீதியில்
ஒரே ஒரு முறை
வந்து பார்...

உனக்காக பூத்த பூக்கள்
எட்டு நாளுக்கு ஒரு பட்டாம்பூச்சி
என குடியமர்த்திவிட்டு
வெளியேறி விடுகிறோம்

நானும்,
எனது பொய்களும்

No comments:

Post a Comment