Sunday, June 17, 2012

முதல் காதல் கடிதம்


கல்லூரி சுவற்றில்
உனது பெயரையும்
எனது பெயரையும்
இணைத்து கரி கொண்டு
கிறுக்கியிருந்தான்
ஒரு அநாமதேயன்.

நீயும் நானும்
எழுதாத
நமக்கான முதல் காதல் கடிதம்
அது!

நம்மை
ஆப்பிள் கடிக்க செய்த
அந்த சாத்தானை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்

கடவுள் கிரீடம்
சூட்டுவதற்காக!

1 comment: