Sunday, June 17, 2012

பங்குனி உத்திரம்


ஐஸ் வியாபாரிக்கும்
ராட்டினக்காரனுக்கும்
பூசாரிக்கும் இது சீசன்

வெறி கொண்ட சாமியாடி
ஆட்ட முடிவில்
பிள்ளைகளுடன் சாப்பிடும்
கறி சாப்பாடு.

கடந்த ஆண்டையும்
இந்த ஆண்டையும்
ஒப்பிட்டு உரையாடும்
முதியவர்கள்.

பருவத்தின் கனவை
பார்வையால் பகிர்ந்து கொள்ளும்
இளசுகள்

தெய்வங்கள் உள்பட
எல்லாருடைய கவனத்தையும்
ஈர்க்கும் குழந்தைகள்

தொலைந்து போன
தூரத்து உறவுகளை
தேடி அலையும்
கண்ணீர் சொந்தங்கள்..

எல்லோருக்கும் சேர்த்து
சிலுவை சுமக்கின்றன
பங்குனி உத்திரத்துக்கு
நேந்து விடப்பட்ட
பலி ஆடுகள்

No comments:

Post a Comment